என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்
Byமாலை மலர்16 Dec 2020 3:33 AM GMT (Updated: 16 Dec 2020 3:33 AM GMT)
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. உற்சவத்தை ஒட்டி தினமும் வேத பாராயணம், திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடக்கிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. புகழ்பெற்ற வைணவ தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம் வரிசையில் 3-வது மிகப்பெரிய தலமாக இந்த கோவில் விளங்குகிறது.
கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் 7 ஆழ்வார்களால் பாசுரங்கள் பாடப்பட்டு மங்களா சாசனம் செய்யப்பட்ட சிறப்புடையவர். இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் வரை தொடர்ந்து உற்சவங்கள் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.
முன்னதாக கடந்த 6-ந் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வந்தது. இதில் நேற்று முன்தினம் கோமளவல்லி தாயார் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று பகல் பத்து உற்சவங்கள் தொடங்கின. வருகிற 25-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.
உற்சவத்தை ஒட்டி தினமும் வேத பாராயணம், திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் 7 ஆழ்வார்களால் பாசுரங்கள் பாடப்பட்டு மங்களா சாசனம் செய்யப்பட்ட சிறப்புடையவர். இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் வரை தொடர்ந்து உற்சவங்கள் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.
முன்னதாக கடந்த 6-ந் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வந்தது. இதில் நேற்று முன்தினம் கோமளவல்லி தாயார் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று பகல் பத்து உற்சவங்கள் தொடங்கின. வருகிற 25-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.
உற்சவத்தை ஒட்டி தினமும் வேத பாராயணம், திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X