என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுசீந்திரம் கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்16 Nov 2020 8:45 AM GMT (Updated: 16 Nov 2020 8:45 AM GMT)
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாணிக்க ஸ்ரீபலி விழாவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாணிக்க ஸ்ரீபலி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் மாணிக்க ஸ்ரீபலி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது.
விழாவையொட்டி தினமும் காலை 10 மணிக்கு மேல் தாணுமாலயசாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன சாத்து தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு மேல் கோவில் முழுவதும் தீப வரிசைகள் ஏற்றப்பட்டு தீபாராதனை, பஞ்சாட்சர ஜெபயோகம், இரவு 7.30 மணிக்கு தாணுமாலய சுவாமியை ரிஷப வாகனத்திலும், திருவேங்கட விண்ணவரும், பெருமாள் கருட வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
தற்போது ஊரடங்கு காரணமாக சுசீந்திரம் கோவில் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் மாணிக்க ஸ்ரீபலி விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
இதேபோல் சுசீந்திரம் அரசடி விநாயகர் கோவில், ஆசிரமம் அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா கோவில், சன்னதி தெரு குலசேகர விநாயகர் கோவில் உள்பட மாவட்டத்திலுள்ள முக்கியமான கோவில்களிலும் கார்த்திகை மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற உள்ளன.
விழாவையொட்டி தினமும் காலை 10 மணிக்கு மேல் தாணுமாலயசாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன சாத்து தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு மேல் கோவில் முழுவதும் தீப வரிசைகள் ஏற்றப்பட்டு தீபாராதனை, பஞ்சாட்சர ஜெபயோகம், இரவு 7.30 மணிக்கு தாணுமாலய சுவாமியை ரிஷப வாகனத்திலும், திருவேங்கட விண்ணவரும், பெருமாள் கருட வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
தற்போது ஊரடங்கு காரணமாக சுசீந்திரம் கோவில் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் மாணிக்க ஸ்ரீபலி விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
இதேபோல் சுசீந்திரம் அரசடி விநாயகர் கோவில், ஆசிரமம் அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா கோவில், சன்னதி தெரு குலசேகர விநாயகர் கோவில் உள்பட மாவட்டத்திலுள்ள முக்கியமான கோவில்களிலும் கார்த்திகை மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X