என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம்
Byமாலை மலர்5 Nov 2020 4:10 AM GMT (Updated: 5 Nov 2020 4:10 AM GMT)
கடலூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பாலாலயம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக திருப்பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு பாலாலயம் நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
பின்னர் அனுக்ஞை மற்றும் வாஸ்து பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை விமானங்கள் சக்தி ஆகர்ஷணம், கும்ப ஸ்தாபனம் மற்றும் ஹோமங்கள் நடந்தது. பின்னர் மகா பூர்ணாகுதி நடைபெற்றது. இதையடுத்து மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சாமிகள் முன்னிலையில் தேரழுந்தூர் கோசகன் பட்டாச்சாரியார் தலைமையில் விமான பாலாலய பிரதிஷ்டை கும்ப புரோஷணமும், தீபாராதனை சாற்றுமுறையும் நடந்தது.
முன்னதாக பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
பின்னர் அனுக்ஞை மற்றும் வாஸ்து பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை விமானங்கள் சக்தி ஆகர்ஷணம், கும்ப ஸ்தாபனம் மற்றும் ஹோமங்கள் நடந்தது. பின்னர் மகா பூர்ணாகுதி நடைபெற்றது. இதையடுத்து மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சாமிகள் முன்னிலையில் தேரழுந்தூர் கோசகன் பட்டாச்சாரியார் தலைமையில் விமான பாலாலய பிரதிஷ்டை கும்ப புரோஷணமும், தீபாராதனை சாற்றுமுறையும் நடந்தது.
முன்னதாக பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X