என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசுதிருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்9 Oct 2020 5:07 AM GMT (Updated: 9 Oct 2020 5:07 AM GMT)
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசுதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சப்பர வீதி உலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி விசுதிருவிழா நேற்று தொடங்கி யது. காலை 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. திருவிழா வருகிற 17-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
திருவிழாவின் 4-ம் நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 14-ந் தேதி நடராஜருக்கு காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 15-ந் தேதி காலை 10 மணிக்கு பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
17-ந் தேதி காலை 10 மணிக்கு விசு தீர்த்தவாரி நடைபெறுகிறது. கொரோனா காலம் என்பதால் விழாக்கள் அனைத்தும் கோவிலின் உள்பிரகாரத்திலேயே நடைபெறும். வழக்கமாக நடைபெறும் சப்பர வீதி உலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, கோவில் உதவி ஆணையர் மா.கண்ணதாசன், தக்கார் சங்கர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
திருவிழாவின் 4-ம் நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 14-ந் தேதி நடராஜருக்கு காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 15-ந் தேதி காலை 10 மணிக்கு பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
17-ந் தேதி காலை 10 மணிக்கு விசு தீர்த்தவாரி நடைபெறுகிறது. கொரோனா காலம் என்பதால் விழாக்கள் அனைத்தும் கோவிலின் உள்பிரகாரத்திலேயே நடைபெறும். வழக்கமாக நடைபெறும் சப்பர வீதி உலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, கோவில் உதவி ஆணையர் மா.கண்ணதாசன், தக்கார் சங்கர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X