search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில்பெருமாள் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு
    X
    குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில்பெருமாள் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு

    குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில்பெருமாள் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு

    குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளில் பெருமாள் ரத்தின அங்கியுடன் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    முசிறி அருகே உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அன்றிலிருந்து பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளினார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று இரவு பெருமாள் ரத்தின அங்கியுடன் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி அய்யங்கார் தலைமையில் செய்திருந்தனர்.
    Next Story
    ×