search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வளர்பிறை நவமியையொட்டி வடரங்கம் ரங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்
    X
    வளர்பிறை நவமியையொட்டி வடரங்கம் ரங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்

    வளர்பிறை நவமியையொட்டி வடரங்கம் ரங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்

    கொள்ளிடம் வடரங்கநாதர் கோவிலில் வளர்பிறை நவமியையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ண பகவானை வழிபட்டனர்.
    கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வடரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வளர்பிறை நவமியையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ண பகவானை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியார் ரமேஷ் செய்திருந்தார்.
    Next Story
    ×