search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் வாசலில் குவிந்துள்ள பூஜை பொருட்களை படத்தில் காணலாம்.
    X
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் வாசலில் குவிந்துள்ள பூஜை பொருட்களை படத்தில் காணலாம்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் வாசலில் குவியும் பூஜை பொருட்கள்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பூஜை செய்ய வேண்டிய பொருட்களை பக்தர்கள் கோவில் வாசலில் வைத்து செல்கிறார்கள். அர்ச்சனைக்கு அனுமதியளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 5 மாதங்களுக்குப் பின்பு கடந்த 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்தது.

    அதைத்தொடர்ந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் முன் வாசல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. கோவில் நுழைவாயிலில் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்து, காய்ச்சல் இல்லை என்றால், கைகளில் கிருமி நாசினி மருந்து தெளித்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிப்படுகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக கொண்டு வரும் எந்த பொருட்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. நேர்ச்சைகள் மற்றும் வழிபாடுகளும் நடத்த அனுமதிக்கப்படவில்லை.

    பொங்கல் வழிபாடு மற்றும் அர்ச்சனைகள் செய்ய அனுமதிக்கப்படாவிட்டாலும், கோவிலுக்குள் பக்தர்கள் சென்று அம்மனை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பக்தர்கள் தினமும் மண்டைக்காடு வந்து அம்மனை கும்பிட்டு செல்கின்றனர்.

    கோவிலுக்குள் வரும் பக்தர்கள் பூஜை செய்வதற்காக பூ மற்றும் அர்ச்சனை பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால் கோவில் நிர்வாகம் பூ, அர்ச்சனை பொருட்களை கோவிலுக்குள் கொண்டு வரக்கூடாது என வழிக்காட்டு அறிவிப்பு செய்துள்ளனர். இதனால் பூஜை செய்யும் பொருட்களை உள்ளே அனுமதிப்பது இல்லை. அதைத்தொடர்ந்து அந்த பொருட்களை வாங்கி கோவில் வாசலில் வைத்து செல்கின்றனர்.

    இதனால் கோவில் வாசலில் பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் குவிகிறது. எனவே கோவில் வழிப்பாட்டில் உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வு செய்து பூஜை பொருட்களை அர்ச்சனைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    Next Story
    ×