என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக விழா: தேர் கட்டும் பணி தீவிரம்
Byமாலை மலர்26 Feb 2020 7:42 AM GMT (Updated: 26 Feb 2020 7:42 AM GMT)
கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக விழாவையொட்டி தேரோட்டம் நடைபெறும். இதற்காக தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசிமக விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மாசிமகத்தையொட்டி கும்பகோணத்தில் அமைந்துள்ள ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் ஆகிய கோவில்களிலும், சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகபெருமாள் ஆகிய கோவில்களிலும் 10 நாட்கள் சிறப்பாக திருவிழா நடைபெறும்.
கும்பேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மாசிமக விழாவில் 5-ம் நாள் ஓலைசப்பரம், 7-ம் நாள் திருக்கல்யாணம், 8, 9-ம் ஆகிய நாட்களில் தேரோட்டமும், 22-ந் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கம்.
இந்த கோவிலில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், சிவன், மங்களாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் தேரில் எழுந்தருளி 2 நாள்கள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்திற்காக கும்பேஸ்வரர் கீழவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்களை கட்டும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்பேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மாசிமக விழாவில் 5-ம் நாள் ஓலைசப்பரம், 7-ம் நாள் திருக்கல்யாணம், 8, 9-ம் ஆகிய நாட்களில் தேரோட்டமும், 22-ந் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கம்.
இந்த கோவிலில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், சிவன், மங்களாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் தேரில் எழுந்தருளி 2 நாள்கள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்திற்காக கும்பேஸ்வரர் கீழவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்களை கட்டும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X