என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுவாமிமலை கோவிலில் 30-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்23 Jan 2020 4:40 AM GMT (Updated: 23 Jan 2020 4:40 AM GMT)
முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான இங்கு முருகன் சுவாமிநாதசாமியாக அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 29-ந் தேதி விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடக்கின்றன. கொடியேற்றத்தை தொடர்ந்து சுவாமிநாதசாமி, விக்னேஸ்வரர், சண்டிகேஸ்வரருடன் மலை கோவிலில் இருந்து புறப்பட்டு உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இரவு சாமி வீதி உலா நடக்கிறது.
விழாவில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 8-ந் தேதி தைப்பூச தினத்தன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடக்கின்றன. பின்னர் சுவாமிநாதசாமி வைரவேல், வைரகிரீடம், தங்க கவசத்துடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அன்று காலை 11 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும், காவிரியில் தீர்த்தவாரியும் நடக்கிறது. 9-ந் தேதி சாமி, மலைக் கோவிலுக்கு திரும்பும் யதாஸ்தான புறப்பாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 29-ந் தேதி விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடக்கின்றன. கொடியேற்றத்தை தொடர்ந்து சுவாமிநாதசாமி, விக்னேஸ்வரர், சண்டிகேஸ்வரருடன் மலை கோவிலில் இருந்து புறப்பட்டு உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இரவு சாமி வீதி உலா நடக்கிறது.
விழாவில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 8-ந் தேதி தைப்பூச தினத்தன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடக்கின்றன. பின்னர் சுவாமிநாதசாமி வைரவேல், வைரகிரீடம், தங்க கவசத்துடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அன்று காலை 11 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும், காவிரியில் தீர்த்தவாரியும் நடக்கிறது. 9-ந் தேதி சாமி, மலைக் கோவிலுக்கு திரும்பும் யதாஸ்தான புறப்பாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X