
விழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 10-ம் நாளான வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு சுவாமி உருகுபலகை தரிசனம், அபிஷேகம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு இலாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக்காட்சி, இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடைபெறுகிறது.
11-ம் நாளான வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் சேரும் ஆனந்த காட்சி நடைபெறுகிறது.
விழாவின் நிறைவு நாளான 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் அன்னதானம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் ஆலிலை சயனம், மங்கள தரிசனம் நடைபெறும்.