என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்31 Dec 2019 6:49 AM GMT (Updated: 31 Dec 2019 6:49 AM GMT)
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை காலை 5.20 மணி முதல் 6.20 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. திருவிழா வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது.
விழா நாட்களில் நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை, சிறப்பு பூஜைகள், சுவாமி வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் வருகிற 5-ந் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டம், 8-ந் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
விழாவில் வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.20 மணிக்கு மேல் சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கின்றது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
விழா நாட்களில் நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை, சிறப்பு பூஜைகள், சுவாமி வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் வருகிற 5-ந் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டம், 8-ந் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
விழாவில் வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.20 மணிக்கு மேல் சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கின்றது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X