என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அம்பு உற்சவம்
Byமாலை மலர்10 Oct 2019 6:16 AM GMT (Updated: 10 Oct 2019 6:16 AM GMT)
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அம்பு உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
விஜயதசமியையொட்டி நேற்று முன்தினம் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் உற்சவர் பெரியநாயகி அம்மனுக்கும் அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் வராகி அம்மன், துர்க்கை அம்மன் ஆகிய சன்னதிகளில் நவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பு உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி சாமி, அம்பாளுக்குசிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மகிஷாசூரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சியாக அம்பு உற்சவம் நடந்தது.
இதற்காக திருவதிகை குணபதீஸ்வரர் கோவில் எதிரே சந்திரசேகரர் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் அம்பு எய்து சூரனை வதம் செய்யும் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
விஜயதசமியையொட்டி நேற்று முன்தினம் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் உற்சவர் பெரியநாயகி அம்மனுக்கும் அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் வராகி அம்மன், துர்க்கை அம்மன் ஆகிய சன்னதிகளில் நவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பு உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி சாமி, அம்பாளுக்குசிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மகிஷாசூரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சியாக அம்பு உற்சவம் நடந்தது.
இதற்காக திருவதிகை குணபதீஸ்வரர் கோவில் எதிரே சந்திரசேகரர் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் அம்பு எய்து சூரனை வதம் செய்யும் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X