என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆவணி திருவிழா: சுவாமி ஆறுமுக பெருமானுக்கு வைர கிரீடம் அணிவிப்பு
Byமாலை மலர்10 Sep 2019 5:53 AM GMT (Updated: 10 Sep 2019 5:53 AM GMT)
நெல்லை குறுக்குத்துறையில் சுவாமி ஆறுமுக பெருமானுக்கு வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. இந்த விழாவில் திளரான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை 5 மணிக்கு உருகு சட்டசேவை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஆறுமுக பெருமான் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். பின்னர் அவர் நெல்லை டவுனுக்கு புறப்பட்டு சென்றார். டவுன் திருப்பணி முக்கில் சுவாமிக்கு வைர கிரீடம் அணிவித்து தங்க வேல் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. டவுனில் 2 நாட்கள் தங்கி இருக்கும் சுவாமி, பின்னர் மீண்டும் கோவிலை வந்தடைகிறார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு சுவாமி முருகப்பெருமான் தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 13-ந் தேதி காலை 10 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு உருகு சட்டசேவை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஆறுமுக பெருமான் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். பின்னர் அவர் நெல்லை டவுனுக்கு புறப்பட்டு சென்றார். டவுன் திருப்பணி முக்கில் சுவாமிக்கு வைர கிரீடம் அணிவித்து தங்க வேல் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. டவுனில் 2 நாட்கள் தங்கி இருக்கும் சுவாமி, பின்னர் மீண்டும் கோவிலை வந்தடைகிறார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு சுவாமி முருகப்பெருமான் தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 13-ந் தேதி காலை 10 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X