என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்4 Sep 2019 4:47 AM GMT (Updated: 4 Sep 2019 4:47 AM GMT)
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வருகிற 9-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு உருகுசட்ட சேவை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு ஆறுமுகப்பெருமான் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் நெல்லை டவுனுக்கு எழுந்தருளுகிறார். டவுனில் 2 நாட்கள் தங்கி இருக்கும் சுவாமி, பின்னர் மீண்டும் கோவிலை வந்தடைகிறார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு சுவாமி முருகப்பெருமான் தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 13-ந்தேதி காலை 10 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
14-ந்தேதி நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப உற்சவம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன ஊழியர்கள், பக்தர்கள் செய்து உள்ளனர்.
இதையொட்டி சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வருகிற 9-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு உருகுசட்ட சேவை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு ஆறுமுகப்பெருமான் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் நெல்லை டவுனுக்கு எழுந்தருளுகிறார். டவுனில் 2 நாட்கள் தங்கி இருக்கும் சுவாமி, பின்னர் மீண்டும் கோவிலை வந்தடைகிறார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு சுவாமி முருகப்பெருமான் தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 13-ந்தேதி காலை 10 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
14-ந்தேதி நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப உற்சவம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன ஊழியர்கள், பக்தர்கள் செய்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X