search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருஷ்ணன்
    X
    கிருஷ்ணன்

    பாகவதம் படியுங்கள்

    பேராபத்துகள் நிறைந்த கரையில்லாப் பிறவிப் பெருங் கடலே மானுட வாழ்வு. இப்பெருங்கடலில் இருந்து நம்மைக் காப்பாற்றக் கருணை உள்ளங்கொண்ட வேதவியாஸர் என்னும் மாமுனி ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்னும் கப்பலைத் தயாரித்துக் கொடுத்துள்ளார்.
    பேராபத்துகள் நிறைந்த கரையில்லாப் பிறவிப் பெருங் கடலே மானுட வாழ்வு.

    இப்பெருங்கடலை எந்தக் கப்பலைக் கொண்டு எந்த மாலுமியின் உதவியால் கடப்பது? நம்மைக் காப்பாற்றக் கருணை உள்ளங்கொண்ட வேதவியாஸர் என்னும் மாமுனி ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்னும் கப்பலைத் தயாரித்துக் கொடுத்துள்ளார்.

    இக்கப்பலில் ஏற விருப்பமுள்ளவர்கள் சரணாகதி நெறியில் நின்று நித்ய பூஜை, தோத்திர பாராயணங்கள், கர்மானுஷ்டானாதிகள், பகவத் விஷயங்களைக் கேட்டல் முதலியவைகளைச் சோம்பலின்றி நம்பிக்கையுடன் செய்து வரவேண்டும்.

    செய்து வரும் பொழுது மனத் தெளிவடைந்த ஓர் நன்னாளில் பிறவிப் பெருங்கடலின் மறுகரையான பகவானுடைய திவ்ய சாசனங்களை அடைய, அந்தப் பகவானே அருளாயிருந்து கப்பலை ஓட்டிச் செல்வான். நம்மை கரையை அடையச் செய்வான்.

    ஸ்ரீமத் பாகவதம் என்னும் கப்பலில் பக்திநெறி என்ற வினை பின்பற்றிப் பிறவிக் கடலின் மறுகரையைச் அடைந்தவர்கள் நாரதர், பரீஷித், விதுரர், உத்தவர், பீஷ்மர், ராஜன், மஹாபலி, ஆஞ்சநேயர், விபீஷணன், கோபிகள், பகுளாச்வர், சுகதேவர், துருவன், பிரகலாதன், சக்கரவர்த்தி, குசேலர், குகன், அம்பரீஷர், சனகாதி அக்ரூரர், சவுனகர், உருக்மாங்கதன், நிருக சக்கராந்தி, முசுகுந்தன், நந்தன், மருத்துக்கள், பாண்டவர்கள், தளபதி, கட்வாங்கன், பிங்களை, சபரி, அஜாமிளன், பதிபராசரர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் இன்னும் பலர்.

    ஸ்ரீமத் பாகவதம் என்பது ஓர் கற்பக விருஷம். அதன் பெருங்கிளைகள் 12 ஸ்கந்தங்கள். சிறு சிறு கிளைகளாக இருக்கும் மேலான அத்தியாயங்களுடன் அது அடர்ந்து படர்ந்து தாபங்களைப் போக்க, நிழலை அள்ளி வீசுகிறது.

    அந்த மரத்தினுடைய இனிய நறுமணம் வீசுகின்ற பூங்கொத்துக்கள் தான், ஸ்ரீவியாச முனிவரால் உபயோகப்படுத்தப்பட்ட பதவின்யாசங்கள், அதன் குலைகள் தான் 3,000க்கும் மேலான செய்யுட்கள்.

    இவ்வாறு விரிந்து பரந்து வளர்ந்திருக்கின்ற பாகவத கிருசத்தில் பூத்துக் காய்த்துக்களித்துப் பக்குவமாகி ரசம் பெருக்கெடுத்து ஓடுவதைப் பருக, பறவைகளாகிய லஜ்ஜனங்கள் பறந்து சென்று அதில் அமர்ந்து பாகவதர சத்தைப் பருகி அதில் லயித்து மோட்சம் என்ற சாம் சாஜ்யத்தை அடைகிறார்கள்.
    Next Story
    ×