என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அறிவாற்றல் அளிக்கும் புத ஆதித்ய யோகம்
Byமாலை மலர்29 March 2019 5:54 AM GMT (Updated: 29 March 2019 5:54 AM GMT)
ஒருவரது ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் அமைந்தவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத்தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவை உண்டாகும்.
செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.
ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் ஒரே ராசியில் இணைந்து அமையப்பெறுவது புத ஆதித்ய யோகம் ஆகும். இந்த யோகம் அமைந்தவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவை உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடும் ஏற்படும். புதன், சூரியனுக்கு பின் அஸ்தங்கம் ஆகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே நல்ல பலனை அளிக்கிறது என்பதை ஜோதிட வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
சூரியனின் ஆட்சி வீடான சிம்மம், சூரியனின் உச்ச வீடான மேஷம், புதனின் ஆட்சி வீடான மிதுனம், புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடான கன்னி ஆகிய நான்கு வீடுகளில் இந்த யோகம் அமைந்திருப்பது சிறப்பு என்று ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒருவரது ஜாதக ரீதியாக புதனும், சூரியனும் 6, 8, 12 ஆகிய வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதியாக வருவது, பகை வீடு அல்லது நீச்ச வீட்டில் இருப்பது, அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை மற்றும் புதன் வக்ர கதியில் இருப்பது ஆகிய நிலைகளில் இந்த யோகம் நல்ல முறையில் அமைவதில்லை என்பதும் ஜோதிட வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் ஒரே ராசியில் இணைந்து அமையப்பெறுவது புத ஆதித்ய யோகம் ஆகும். இந்த யோகம் அமைந்தவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவை உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடும் ஏற்படும். புதன், சூரியனுக்கு பின் அஸ்தங்கம் ஆகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே நல்ல பலனை அளிக்கிறது என்பதை ஜோதிட வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
சூரியனின் ஆட்சி வீடான சிம்மம், சூரியனின் உச்ச வீடான மேஷம், புதனின் ஆட்சி வீடான மிதுனம், புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடான கன்னி ஆகிய நான்கு வீடுகளில் இந்த யோகம் அமைந்திருப்பது சிறப்பு என்று ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒருவரது ஜாதக ரீதியாக புதனும், சூரியனும் 6, 8, 12 ஆகிய வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதியாக வருவது, பகை வீடு அல்லது நீச்ச வீட்டில் இருப்பது, அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை மற்றும் புதன் வக்ர கதியில் இருப்பது ஆகிய நிலைகளில் இந்த யோகம் நல்ல முறையில் அமைவதில்லை என்பதும் ஜோதிட வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X