என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை
Byமாலை மலர்31 Aug 2018 5:26 AM GMT (Updated: 31 Aug 2018 5:26 AM GMT)
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் மாசி கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். அதுபோல், ஆவணி அஸ்வதி பொங்கல் விழா ஆண்டுதோறும் நடக்கிறது.
இந்த ஆண்டு பொங்கல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், மதியம் சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது. மாலையில் சிறப்பு நிகழ்ச்சியாக சுமங்கலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், காலை 8 மணிக்கு பஜனை, 10 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 11.30 மணிக்கு பொங்கல் வழிபாடு, மதியம் உச்ச பூஜை, அன்னதானம், இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது.
1-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து பரிசு வழங்குதலும் நடக்கிறது. பொங்கல் விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் தேவி சேவா சங்கத்தினர் செய்துள்ளனர்.
இந்த ஆண்டு பொங்கல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், மதியம் சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது. மாலையில் சிறப்பு நிகழ்ச்சியாக சுமங்கலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், காலை 8 மணிக்கு பஜனை, 10 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 11.30 மணிக்கு பொங்கல் வழிபாடு, மதியம் உச்ச பூஜை, அன்னதானம், இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது.
1-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து பரிசு வழங்குதலும் நடக்கிறது. பொங்கல் விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் தேவி சேவா சங்கத்தினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X