என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் நாளை நடக்கிறது
Byமாலை மலர்27 Jun 2018 9:57 AM GMT (Updated: 27 Jun 2018 9:57 AM GMT)
வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் 14-ம் ஆண்டு பிரமோற்சவவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரமோற்சவ விழாவையொட்டி தினந்தோறும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடந்து வந்தது. கடந்த 22-ந்தேதி தவழ்ந்த கண்ணன் பல்லக்கு நிகழ்ச்சியும், மாலையில் ராமர் திருக்கோலம் அனுமந்த வாகன புறப்பாடும் நடந்தது.
தொடர்ந்து 24-ந்தேதி கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் சுகுமாறன், தீப்பாய்ந்தான், அரசு செயலர் சுந்தரவடிவேலு, இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் ஆகியோர் முன்னிலையில் திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் வடம்பிடித்து தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து ஜூலை 1-ந்தேதி வரை ஊஞ்சல் உற்சவமும், 2-ந்தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி ராமதாஸ் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
பிரமோற்சவ விழாவையொட்டி தினந்தோறும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடந்து வந்தது. கடந்த 22-ந்தேதி தவழ்ந்த கண்ணன் பல்லக்கு நிகழ்ச்சியும், மாலையில் ராமர் திருக்கோலம் அனுமந்த வாகன புறப்பாடும் நடந்தது.
தொடர்ந்து 24-ந்தேதி கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் சுகுமாறன், தீப்பாய்ந்தான், அரசு செயலர் சுந்தரவடிவேலு, இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் ஆகியோர் முன்னிலையில் திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் வடம்பிடித்து தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து ஜூலை 1-ந்தேதி வரை ஊஞ்சல் உற்சவமும், 2-ந்தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி ராமதாஸ் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X