என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவிலில் சுவாமி - அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா
Byமாலை மலர்18 Nov 2017 5:43 AM GMT (Updated: 18 Nov 2017 5:43 AM GMT)
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி நேற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது.
நெல்லையில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி- அம்பாள் வீதி உலா சென்று வந்தனர். மேலும் கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் பக்திஇசை, சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 14-ந் தேதி அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா தொடங்கி நடந்து வந்தது. இந்த விழா நேற்று முன்தினம் இரவு வரை நடந்தது. தினமும் மாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சுவாமி-அம்பாள் பூப்பந்து உருட்டி விளையாடும் வைபவம் நடந்தது.
நேற்று மறுவீடு பட்டணப்பிரவேச விழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, ஹோம பூஜை நடந்தது.
இரவு 7-30 மணிக்கு சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டணப்பிரவேசம், வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 14-ந் தேதி அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா தொடங்கி நடந்து வந்தது. இந்த விழா நேற்று முன்தினம் இரவு வரை நடந்தது. தினமும் மாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சுவாமி-அம்பாள் பூப்பந்து உருட்டி விளையாடும் வைபவம் நடந்தது.
நேற்று மறுவீடு பட்டணப்பிரவேச விழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, ஹோம பூஜை நடந்தது.
இரவு 7-30 மணிக்கு சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டணப்பிரவேசம், வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X