என் மலர்

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இயேசு
    X
    இயேசு

    தவக்கால சிந்தனைகள்: விருந்தோம்பலை வளர்த்து கொள்வோம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முடிந்த அளவுக்கு நாம் எல்லோரையும் ஏற்று அன்பு செய்வதற்கும், சக மனிதர்களை கண் திறந்து பார்ப்பதற்கும் இந்த விருந்தோம்பல் என்ற பண்பை நம்மில் வளர்த்துக்கொள்வோம்.
    ‘நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும், ஒரு உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளை தம்முடையதாக கருதவில்லை. எல்லாம் அவர்களுக்கு பொதுவாய் இருந்தது’ (தி.ப.4:32)

    எத்தகைய எதிர்பார்ப்பும், கைமாறும் இல்லாமல் சக மனிதர்களை அன்பு செய்வதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் உதவி செய்வது விருந்தோம்பல் என்ற பண்பே ஆகும். ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு பாராது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு பாராது அனைவரையும் வரவேற்கிற ஒரு பண்பே விருந்தோம்பல் ஆகும். இது வழிப்போக்கருக்கு உதவி செய்ய நம்மைத் தூண்டி எழுப்பும். இது வாழ்க்கையில் கடந்து செல்கின்ற மனிதர்களுக்கு தன்னம்பிக்கை கொண்டு உதவி செய்ய நமக்கு கற்றுக்கொடுக்கும்.

    கனிவு, தியாகம் ஆகிய நல்ல பண்புகளில் உயர்ந்ததாக விருந்தோம்பல் அடையாளப்படுத்தப்படுகிறது. விருந்தோம்பல் இதமானது. ஆனால் இது பல மனிதர்களை நமக்குரியவர்களாக உருமாற்றுகின்ற பண்புடையது. ஏனென்றால் விருந்தோம்பலில் எப்போதும் அதிகாரம் இருக்காது. எல்லோருடைய மனதையும் ஏற்று அதற்கேற்ப வாழ்வதற்கு உதவி செய்யும். நாம் வாழ்கின்ற இந்த உலக சூழலில் இன்றைய கால சூழலில் அருகில் இருக்கின்ற மனிதனையே அன்பு செய்வதற்கு வாய்ப்பில்லாது கடந்து சென்று கொண்டிருக்கிறோம். எனவே, முடிந்த அளவுக்கு நாம் எல்லோரையும் ஏற்று அன்பு செய்வதற்கும், சக மனிதர்களை கண் திறந்து பார்ப்பதற்கும் இந்த விருந்தோம்பல் என்ற பண்பை நம்மில் வளர்த்துக்கொள்வோம்.

    -அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    Next Story
    ×