search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சமரன் படத்தின் போஸ்டர்
    X
    சமரன் படத்தின் போஸ்டர்

    சமரன்

    திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார், அஷ்வதி, சுஹாசினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சமரன்’ படத்தின் முன்னோட்டம்.
    இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில், ரோஷ் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘சமரன்’. இப்படத்தில் சரத்குமார் நாயகனாக நடிக்க, அஷ்வதி நாயகியாக நடிக்கிறார். நந்தா, சுஹாசினி, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு ஆகியோரும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வேத்சங்கர் சுகவனம் இசையமைக்கிறார். 

    தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்ற குமார் ஶ்ரீதர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார். சண்டை பயிற்சி விக்கி வினோத்குமார் செய்ய, கலை இயக்கத்தை ஶ்ரீமன் பாலாஜி கவனிக்கின்றனர்.

    சமரன் படக்குழு
    சமரன் படக்குழு

    படம் குறித்து தயாரிப்பாளர் ரோஷ் குமார் கூறியதாவது: “
    இந்த கதை முழுக்க, முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், இந்த காலகட்டத்திற்கு தேவையான கருத்துகளை உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்த கதையை இயக்குநர் எழுதி முடித்த பின், இந்த மண் சார்ந்த கதாபாத்திரத்திற்கு, சரியான நபராக எனக்கு தோன்றியது சரத்குமார் தான். இயக்குநருக்கும் சரத்குமார் தான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்றார். நடிகர் சரத்குமார் இந்த கதையை கேட்டவுடன், ஆர்வமாக இது தனக்கான கதையென்று உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்”. இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×