search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா- வாழ்த்தும் திரைப்பிரபலங்கள்
    X

    இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா- வாழ்த்தும் திரைப்பிரபலங்கள்

    • முதலில் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.
    • இந்த வெற்றியை இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 398 என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 327 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பை தொடரையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகிறது. அதில், இயக்குனர் வெங்கட் பிரபு, "சாவு பயத்தை காட்டிட்டீங்களே பரமா என்பது போன்று இருந்தது. நீங்கள் யாரை மேன் ஆப்தி மேட்ச் என்று சொல்வீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும், நடிகர் சாந்தனு, "இந்தியா மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. நன்றி முகமது சமி . 2019-யின் இழப்பு மீட்டெடுக்கப்பட்டது" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×