என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
வருமான வரியில் சிக்கிய இயக்குனர் - மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
Byமாலை மலர்28 May 2022 8:22 AM GMT (Updated: 28 May 2022 8:22 AM GMT)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி இவர் பல வெற்றிப்படங்களையும் தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா நெகட்டிவ் கேரக்டர்களையை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யாவின் மீது வருமான வரித்துறையினரால் ஆறு வழக்குகள் தொடரப்பட்டன.
வருமான வரி கணக்குக்கான மறு மதிப்பீட்டு நடைமுறைகள் நிலுவையில் இருப்பதால், சென்னை எழும்பூர், அல்லிகுளம் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி எஸ்.ஜே.சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், வருமான வரித்துறையினால் முறையான சோதனை நடத்திய பிறகே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரிக் கணக்கை எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்யாததால் அவர் வழக்கை தள்ளுபடி செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X