search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அருண் விஜய் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்
    X
    அருண் விஜய் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்

    ரோட்டோர ஓட்டலுக்கு திடீர் விசிட் அடித்த அருண்விஜய்

    ரோட்டோரக் கடையில் உணவருந்திய போது எடுத்த புகைப்படத்தை நடிகர் அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று தனுஷ்கோடியில் பரபரப்பான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. 

    அப்போது மதிய இடைவேளையில் அருகே இருந்த ரோட்டுக் கடையில் நடிகர் அருண்விஜய், திடீரென நுழைந்ததும் கடையில் இருந்தவர்கள் அவரை பார்த்து அதிர்ச்சியுற்றனர். நான் இங்கே சாப்பிட வந்துள்ளேன், என்ன இருக்கிறது என்று கேட்க, சூடா மீன் குழம்பும், மீன் வறுவலும் இருக்கிறது என்று சொல்ல, அவருக்கு இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. அவருடன் படக்குழுவினர் சிலரும் அமர்ந்து சாப்பிட்டனர். 

    ஹரி, அருண்விஜய்
    ஹரி, அருண்விஜய்

    அங்கு எடுத்த புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அருண்விஜய், “ரோட்டுக் கடையில் உணவருந்திய போது.. இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×