என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தொழிலதிபராக மாறிய கீர்த்தி சுரேஷ்
Byமாலை மலர்22 Aug 2021 6:59 AM GMT (Updated: 22 Aug 2021 6:59 AM GMT)
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், புதிய தொழில் ஒன்றை தொடங்கி உள்ளார்.
ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தி வந்த கீர்த்தி சுரேஷ் ‘நடிகையர் திலகம்’ படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு அனைத்து மொழி திரையுலகினராலும் கவனிக்கப்பட்டு முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது தமிழில் அண்ணாத்த, சாணிக் காயிதம் போன்ற படங்களையும், தெலுங்கில் சர்காரு வாரி பட்டா மற்றும் மலையாளத்தில் அரபிக்கடலண்டே சிம்கம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது தொழிலதிபராக மாறி உள்ளார். சருமத்தை பாதுகாக்க உதவும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இந்த அழகு சாதன பொருட்கள் அனைத்து இயற்கையான முறையில் தயார் செய்யப்படுகின்றனவாம். இதை விளம்பரப்படுத்தவும், ஆன்லைனில் விற்பனை செய்யவும் தனியாக இணையதளம் ஒன்றையும் அவர் துவங்கியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X