search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அதர்வா
    X
    அதர்வா

    தடுமாறும் காவல் அதிகாரியாக அதர்வா முரளி

    முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முரளி. இவர் விரைவில் வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குனர் சர்ஜுன் இயக்கியுள்ள "துணிந்த பின்" கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் காவல் அதிகாரி 'வெற்றி' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    இதுகுறித்து அதர்வா முரளி கூறும்போது, ‘இயக்குனர் சர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதையை பற்றி விவரிக்கும் போது, எந்த உணர்வை பற்றிய கதையை சொல்லப்போகிறார், என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். இந்தப் படம் தைரியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த பின்னர், என் மனம் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றது. 

    அதர்வா
    நவரசா படத்தில் அதர்வா

    நான் ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரியாக (Special Task Force officer) நடிக்கவுள்ளேன், என்று கூறியபோது ஆடம்பர காவல் அதிகாரி உடையில், மிக ஸ்டைலாக என்னை நானே கற்பனை செய்து கொண்டேன். இந்தப்படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குனர் சர்ஜுன் உடன் பணி புரிந்தது மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தை செய்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது.
    Next Story
    ×