என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
Byமாலை மலர்26 Oct 2020 11:27 AM GMT (Updated: 26 Oct 2020 11:27 AM GMT)
சுந்தர் சி-யின் அடுத்த படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களை தயாரித்த இயக்குனர் சுந்தர் சி, தனது அவ்னி மூவிஸ் நிறுவனம் மூலம் அடுத்ததாக ‘மாயாபஜார்’ என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார். பத்ரி இப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், யோகி பாபு, அஸ்வின், வி.டி.வி.கணேஷ், ஆர்.என்.ஆர்.மனோகர், ஸ்ருதி மராத்தே, ரித்திகாசென், மாஸ்டர் சக்தி ஆகியோர் நடித்துள்ளார்கள். கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்தி முடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘நான் ரொம்ப பிஸி’ என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையன்று நேரடியாக சன் டி.வி.யில் ஒளிபரப்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X