என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிரியங்கா சோப்ராவின் நாய் குட்டிக்கு கிடைத்த மவுசு
Byமாலை மலர்5 March 2018 2:44 PM GMT (Updated: 5 March 2018 2:44 PM GMT)
பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ராவின் நாய்க்குட்டிக்கு பெரிய மவுசு கிடைத்துள்ளது.
இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்கள், வெளிநாட்டு டி.வி. தொடரில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பிரியங்கா சோப்ரா ஒரு நாய் குட்டியை வளர்க்கிறார். அதற்கு டயானா சோப்ரா என்று பெயர் சூட்டி இருக்கிறார். இந்த நாய் குட்டிக்கு இன்ஸ்டாகிராம் இணையதள கணக்கும் தொடங்கி இருக்கிறார்.
இந்த நாய் குட்டியை பிரியங்கா சோப்ரா கையில் வைத்திருக்கும் படம், மார்போடு அணைத்துக் கொண்டிருக்கும் படம் என்று விதம் விதமாக நாய்குட்டியை அவர் கொஞ்சும் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
தன்னை டயானா குட்டியின் அம்மா என்று குறிப்பிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, தன்னுடைய குழந்தை போலவே இந்த நாய் குட்டியை பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்த நாய் தனியாக இருக்கும், படுத்திருக்கும், நிமிர்ந்து பார்க்கும் விதம் விதமான படங்களையும் இந்த நாய் குட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த டயானா சோப்ரா நாய்குட்டியின் இன்ஸ்டாகிராம் கணக்கை 55 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். நடிகையின் நாய்க்குட்டிக்கு வந்த மவுசை பாருங்கள் என்று இந்தி பட உலகினர் கூறுகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X