search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிரியங்கா சோப்ராவின் நாய் குட்டிக்கு கிடைத்த மவுசு
    X

    பிரியங்கா சோப்ராவின் நாய் குட்டிக்கு கிடைத்த மவுசு

    பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ராவின் நாய்க்குட்டிக்கு பெரிய மவுசு கிடைத்துள்ளது.
    இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்கள், வெளிநாட்டு டி.வி. தொடரில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    பிரியங்கா சோப்ரா ஒரு நாய் குட்டியை வளர்க்கிறார். அதற்கு டயானா சோப்ரா என்று பெயர் சூட்டி இருக்கிறார். இந்த நாய் குட்டிக்கு இன்ஸ்டாகிராம் இணையதள கணக்கும் தொடங்கி இருக்கிறார்.

    இந்த நாய் குட்டியை பிரியங்கா சோப்ரா கையில் வைத்திருக்கும் படம், மார்போடு அணைத்துக் கொண்டிருக்கும் படம் என்று விதம் விதமாக நாய்குட்டியை அவர் கொஞ்சும் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.



    தன்னை டயானா குட்டியின் அம்மா என்று குறிப்பிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, தன்னுடைய குழந்தை போலவே இந்த நாய் குட்டியை பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்த நாய் தனியாக இருக்கும், படுத்திருக்கும், நிமிர்ந்து பார்க்கும் விதம் விதமான படங்களையும் இந்த நாய் குட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

    இந்த டயானா சோப்ரா நாய்குட்டியின் இன்ஸ்டாகிராம் கணக்கை 55 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். நடிகையின் நாய்க்குட்டிக்கு வந்த மவுசை பாருங்கள் என்று இந்தி பட உலகினர் கூறுகிறார்கள்.
    Next Story
    ×