என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மேக்கப்மேன் என் கையை முறுக்கி அடித்தார்: ‘பிசாசு’ படநாயகி புகார்
Byமாலை மலர்22 March 2017 6:56 AM GMT (Updated: 22 March 2017 6:56 AM GMT)
மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தின் மூலம் நாயகி ஆன பிரயாகா மார்ட்டின், மேக்கப்மேன் தனது கையை முறுக்கி அடித்ததாக புகார் ஒன்றை கூறியுள்ளார். அவரது முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படம் மூலம் நாயகி ஆனவர் பிரயாகா மார்ட்டின். கேரளாவை சேர்ந்த இவர், தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
பி.டி.குஞ்சு முகமது இயக்கத்தில் ‘விஸ்வாச பூர்வம் மன்சூர்’ என்ற படத்தில் நடிப்பதற்காக சமீபத்தில் சென்றபோது நடந்த சம்பவம் பற்றி கூறிய பிரயாகா...
“இந்த படத்தில் நான் இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறேன். எனவே மேக்கப் தேவை இல்லை என்றார்கள். சம்பவத்தன்று நான் அதிகாலை 4.30 மணிக்கு செட்டுக்கு சென்றேன். முகம் டல்லாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். மேக்கப் மேனிடமும் இதை தெரிவித்தார்.
இதற்காக மேக்கப் மேனிடம் சென்றபோது அவர் என்னை கேவலமாக பார்த்ததுடன், அசிங்கமாகவும் திட்டினார். படப்பிடிப்பு முக்கியம் என்பதால் அதை கவனிக்காதது போல இருந்தேன். படப்பிடிப்பு முடிந்தபிறகு அம்மாவிடம் சொன்னேன்.
அவர் வந்து கேட்டபோது, மேக்கப்மேன் கண்டபடி ஏசினார். நான், மரியாதையாக பேசும்படி கூறினேன். உடனே அவர் என் கையை முறுக்கி அடித்தார். ஆனால், அவரது நண்பரான ஆர்ட் டைரக்டரை வைத்து நான் அவரை தாக்கியதாக பேஸ்புக்கில் பொய்யான தகவலை பதிவு செய்துள்ளார்.
என்னை தாக்கிய மேக்கப்மேன், பொய்யான தகவலை பேஸ்புக்கில் பதிவு செய்த ஆர்ட் டைரக்டர் ஆகியோர் மீது போலீசில் புகார் செய்ய இருக்கிறேன்” என்றார்.
பி.டி.குஞ்சு முகமது இயக்கத்தில் ‘விஸ்வாச பூர்வம் மன்சூர்’ என்ற படத்தில் நடிப்பதற்காக சமீபத்தில் சென்றபோது நடந்த சம்பவம் பற்றி கூறிய பிரயாகா...
“இந்த படத்தில் நான் இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறேன். எனவே மேக்கப் தேவை இல்லை என்றார்கள். சம்பவத்தன்று நான் அதிகாலை 4.30 மணிக்கு செட்டுக்கு சென்றேன். முகம் டல்லாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். மேக்கப் மேனிடமும் இதை தெரிவித்தார்.
இதற்காக மேக்கப் மேனிடம் சென்றபோது அவர் என்னை கேவலமாக பார்த்ததுடன், அசிங்கமாகவும் திட்டினார். படப்பிடிப்பு முக்கியம் என்பதால் அதை கவனிக்காதது போல இருந்தேன். படப்பிடிப்பு முடிந்தபிறகு அம்மாவிடம் சொன்னேன்.
அவர் வந்து கேட்டபோது, மேக்கப்மேன் கண்டபடி ஏசினார். நான், மரியாதையாக பேசும்படி கூறினேன். உடனே அவர் என் கையை முறுக்கி அடித்தார். ஆனால், அவரது நண்பரான ஆர்ட் டைரக்டரை வைத்து நான் அவரை தாக்கியதாக பேஸ்புக்கில் பொய்யான தகவலை பதிவு செய்துள்ளார்.
என்னை தாக்கிய மேக்கப்மேன், பொய்யான தகவலை பேஸ்புக்கில் பதிவு செய்த ஆர்ட் டைரக்டர் ஆகியோர் மீது போலீசில் புகார் செய்ய இருக்கிறேன்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X