என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கூகுள் பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்: இயக்குனர் கார்த்திக் நரேன்
Byமாலை மலர்18 March 2017 10:45 AM GMT (Updated: 18 March 2017 10:45 AM GMT)
கூகுளை பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டதாக இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடித்த ‘துருவங்கள் பதினாறு’ 75 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தின் 75-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது.
“கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் ‘நரகாசூரன்’ படத்தை நான் தயாரிக்கிறேன்” என்றார். கார்த்திக் நரேன் பேசும்போது...
“என்னுடைய பூர்வீகம் ஊட்டி. கோவையில் வசிக்கிறோம். நடுத்தர குடும்பம். சினிமா ஆசையில் சென்னை வந்தேன். ‘ஜில் ஜங் ஜக்’ சூரஜ் வைத்தியிடம் சில மாதங்கள் உதவி இயக்குனராக வேலை செய்தேன். பிறகு, இந்த கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடினேன். இருபத்தியொரு வயது பையனான என்னை நம்பி சில கோடிகளை கொடுக்க யாரும் தயாராக இல்லை.
என்னை யாரும் நம்பவில்லை என்று அப்பாவிடம் போய் சொன்னேன். நான் உன்னை நம்புகிறேன் என்று சொல்லி, இந்த படத்தை தயாரித்தார். சினிமா பற்றி எனக்கு அதிகம் தெரியாது. கூகுள் பார்த்துதான் கற்றுக் கொண்டேன்.
ரகுமான் என்னை நம்பி நடிக்க சம்மதித்தார். இப்போது, பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறோம். சின்ன பையன், புது டீம் என நினைக்காமல் மணிரத்னம், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பாராட்டினார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரகுமான் என பலர் சப்போர்ட் செய்தாங்க”என்றார்.
நிகழ்ச்சியில் நடிகர் ரகுமான் படக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தின் 75-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது.
“கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் ‘நரகாசூரன்’ படத்தை நான் தயாரிக்கிறேன்” என்றார். கார்த்திக் நரேன் பேசும்போது...
“என்னுடைய பூர்வீகம் ஊட்டி. கோவையில் வசிக்கிறோம். நடுத்தர குடும்பம். சினிமா ஆசையில் சென்னை வந்தேன். ‘ஜில் ஜங் ஜக்’ சூரஜ் வைத்தியிடம் சில மாதங்கள் உதவி இயக்குனராக வேலை செய்தேன். பிறகு, இந்த கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடினேன். இருபத்தியொரு வயது பையனான என்னை நம்பி சில கோடிகளை கொடுக்க யாரும் தயாராக இல்லை.
என்னை யாரும் நம்பவில்லை என்று அப்பாவிடம் போய் சொன்னேன். நான் உன்னை நம்புகிறேன் என்று சொல்லி, இந்த படத்தை தயாரித்தார். சினிமா பற்றி எனக்கு அதிகம் தெரியாது. கூகுள் பார்த்துதான் கற்றுக் கொண்டேன்.
ரகுமான் என்னை நம்பி நடிக்க சம்மதித்தார். இப்போது, பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறோம். சின்ன பையன், புது டீம் என நினைக்காமல் மணிரத்னம், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பாராட்டினார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரகுமான் என பலர் சப்போர்ட் செய்தாங்க”என்றார்.
நிகழ்ச்சியில் நடிகர் ரகுமான் படக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X