என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஏழு வருடங்களுக்கு பிறகு துபாயில் நடக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி
Byமாலை மலர்12 Feb 2017 8:06 AM GMT (Updated: 12 Feb 2017 8:06 AM GMT)
ஏழு வருடங்களுக்குப் பிறகு துபாயில் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
கடந்த 1998-ம் ஆண்டு அமீரகத்தில் ஏ.ஆர்.ரகுமான் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார். தற்போது ஏழு வருடங்களுக்குப் பிறகு ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி வரும் மார்ச் 17-ஆம் தேதி ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளப் பண்பலை 99.6 மற்றும் மலையாள நாளிதழ் மாத்ருபூமி செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு நிகழ்வு பிப்ரவரி 8-ஆம் தேதி 'தூசிட் தானி' என்ற ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து நடைபெற்றது.
ஆஸ்கார் வெற்றி நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், 1998-ஆம் வருடத்தில் அமீரகத்தில் தான் நிகழ்த்திய தனது முதல் இசை நிகழ்ச்சியைப் பல துபாய் வாசிகள் இன்னும் நினைவில் வைத்துக் கொண்டு ‘நான் உங்களது முதல் துபாய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியும் அப்படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஏ.ஆர்.ரகுமான் முதல் டிக்கெட்டை வெளியிட அதனை மலபார் கோல்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாம்லால் பெற்றுக் கொண்டார். மார்ச் 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இசை சாதனையாளர் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் அவர் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பிரபலமான பாடல்களை மிகப்பெரிய இசைக்குழுவினருடன் ஏ.ஆர்.ரகுமானோடு இணைந்து பிரபல பின்னணி பாடகர்கள் பாடகியர்கள் பாடவுள்ளனர்.
இசைப்புயலின் இசை வெள்ளத்தில் மூழ்க டிக்கெட்டுகளை http://platinumlist.net வாங்கலாம். மேலும் விபரங்களுக்கு 04-4562240 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளப் பண்பலை 99.6 மற்றும் மலையாள நாளிதழ் மாத்ருபூமி செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு நிகழ்வு பிப்ரவரி 8-ஆம் தேதி 'தூசிட் தானி' என்ற ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து நடைபெற்றது.
ஆஸ்கார் வெற்றி நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், 1998-ஆம் வருடத்தில் அமீரகத்தில் தான் நிகழ்த்திய தனது முதல் இசை நிகழ்ச்சியைப் பல துபாய் வாசிகள் இன்னும் நினைவில் வைத்துக் கொண்டு ‘நான் உங்களது முதல் துபாய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியும் அப்படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஏ.ஆர்.ரகுமான் முதல் டிக்கெட்டை வெளியிட அதனை மலபார் கோல்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாம்லால் பெற்றுக் கொண்டார். மார்ச் 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இசை சாதனையாளர் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் அவர் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பிரபலமான பாடல்களை மிகப்பெரிய இசைக்குழுவினருடன் ஏ.ஆர்.ரகுமானோடு இணைந்து பிரபல பின்னணி பாடகர்கள் பாடகியர்கள் பாடவுள்ளனர்.
இசைப்புயலின் இசை வெள்ளத்தில் மூழ்க டிக்கெட்டுகளை http://platinumlist.net வாங்கலாம். மேலும் விபரங்களுக்கு 04-4562240 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X