என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தொடரும் ராகவா லாரன்ஸின் மனிதாபிமானம்
Byமாலை மலர்23 Oct 2016 12:13 PM GMT (Updated: 23 Oct 2016 12:13 PM GMT)
ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல மனிதாபிமானம் மிக்க செயல்களை செய்து வருகிறார். அவரது மனிதாபிமானத்தை மேலும் பறைசாற்றும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சினிமா மட்டுமில்லாது சினிமாவுக்கு வெளியேயும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் ராகவேந்திரா அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன்மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை, எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக இல்லம் நடத்தி வரும் லாரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கு நடன பயிற்சியும் கொடுத்து, அவர்களும் வாழ்க்கையில் முன்னேற தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இருதய நோயால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு அவரது சொந்த செலவில் அறுவை சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை இவருடைய முயற்சியில் 130 குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு பூரண நலத்துடன் வீடு திரும்பியிருக்கிறார்கள். இந்நிலையில், தற்போது 131-வது குழந்தையாக பிரியங்கா என்ற குழந்தைக்கு தற்போது இருதய அறுவை சிகிச்சை ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.
இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரியங்கா பூரண நலத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, டாக்டர்களுக்கு ராகவா லாரன்ஸ் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும், ராகவா லாரன்ஸுக்கு பிரியங்காவின் பெற்றோர்கள் மட்டுமில்லாது பலரும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக இல்லம் நடத்தி வரும் லாரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கு நடன பயிற்சியும் கொடுத்து, அவர்களும் வாழ்க்கையில் முன்னேற தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இருதய நோயால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு அவரது சொந்த செலவில் அறுவை சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை இவருடைய முயற்சியில் 130 குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு பூரண நலத்துடன் வீடு திரும்பியிருக்கிறார்கள். இந்நிலையில், தற்போது 131-வது குழந்தையாக பிரியங்கா என்ற குழந்தைக்கு தற்போது இருதய அறுவை சிகிச்சை ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.
பிரியங்கா மற்றும் அவளது பெற்றோர்
இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரியங்கா பூரண நலத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, டாக்டர்களுக்கு ராகவா லாரன்ஸ் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும், ராகவா லாரன்ஸுக்கு பிரியங்காவின் பெற்றோர்கள் மட்டுமில்லாது பலரும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X