என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியான தனுஷ், விஜய் சேதுபதி படங்கள்
Byமாலை மலர்26 Sep 2016 4:51 AM GMT (Updated: 26 Sep 2016 4:51 AM GMT)
தனுஷ், விஜய் சேதுபதி நடித்த படங்கள் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியானது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
திருட்டு வி.சி.டி பாதிப்பில் இருந்த திரையுலகம் இப்போது புதிய படங்களை உடனுக்குடன் வெளியிடும் இணையதளங்கள் பிடியில் சிக்கி தவிக்கிறது. ஏற்கனவே திருட்டு வி.சி.டிக்களை கட்டுப்படுத்த திரையுலக சங்கத்தினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர். ரகசிய குறியீடு மூலம் புதிய படங்களை பதிவு செய்யும் திரையரங்குகள் கண்காணிக்கப்பட்டன. திருட்டு வி.சி.டிக்களை விற்பனை செய்தவர்களை போலீசாரிடம் பிடித்து கொடுத்தார்கள்.
இதன் மூலம் திருட்டு வி.சி.டிக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில், இணையதளங்களில் புதிய படங்களை வெளியிடும் இன்னொரு நூதன திருட்டுகள் பட உலகினருக்கு பெரிய தலைவலியாக வந்து நிற்கிறது. ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான கபாலி படத்தை இணையதளங்களில் பார்க்கலாம் என்று அறிவிப்புகள் வந்தன.
இதைத்தொடர்ந்து படக்குழுவினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கபாலி படத்தை இணையதளங்களில் வெளியிடக்கூடாது என்று தடை உத்தரவு பெற்றனர். கபாலி படத்தை வெளியிட தயாரான இணையதளங்களும் முடக்கப்பட்டன. ஆனாலும் அதையும் மீறி ‘கபாலி’ படம் திரைக்கு வந்த அதே நாள் காலையில் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. இது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து திரைக்கு வந்துள்ள தொடரி, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளி வந்துள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்து பலரும் பார்த்து வருகிறார்கள். தொடரி கடந்த வியாழக்கிழமையும் ஆண்டவன் கட்டளை வெள்ளிக்கிழமையும் திரைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டு படக்குழுவினரும் அதிர்ச்சியில் உள்ளனர். இணையதளங்களில் வந்ததால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் டுவிட்டரில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை தடுப்பதற்கு களத்தில் இறங்கும்படி தனுசுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார். இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் விஷால் முன்னிலையில் இருப்பதாக நடிகை குஷ்பு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
புதிய படங்கள் உடனுக்குடன் தொடர்ந்து இணையதளங்களில் வெளிவருவதால் அடுத்தடுத்து படங்களை திரைக்கு கொண்டு வர உள்ள தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவிப்பில் இருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X