என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கபாலி படக்குழுவினருக்கு வாய் பூட்டு போட்ட ரஞ்சித்
Byமாலை மலர்27 Jun 2016 7:14 AM GMT (Updated: 27 Jun 2016 7:14 AM GMT)
‘கபாலி’ படம் குறித்து எதுவும் வாய் திறக்கவேண்டாம் என்று படக்குழுவினருக்கு ரஞ்சித் வாய் பூட்டு போட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ரஜினி நடிப்பில் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் படம் ‘கபாலி’. இப்படத்தை ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படம் ஆரம்பித்ததிலிருந்து இப்படத்தின் கதை மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்து எந்த தகவலும் கசிந்துவிடக்கூடாது என்பதில் படக்குழுவினர் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால், ரசிகர்களோ ‘கபாலி’ படத்தின் புதிய செய்திகள் எதுவும் வெளிவராதா? என்ற ஆவலுடன் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். செய்திகளை ரசிகர்களுக்கு கொண்டு செல்லும் மீடியாக்களும், ‘கபாலி’ படத்தில் நடித்தவர்களிடம் அப்படம் குறித்து கேட்டால் யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள்.
இதுகுறித்து அவர்களே கூறும்போது, ‘கபாலி’ படம் குறித்து இப்போதைக்கு எதுவும் வெளியில் சொல்லவேண்டாம் என்று படத்தின் இயக்குனர் ரஞ்சித், தங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறுகின்றனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏனென்றால், ‘கபாலி’ படத்தின் ஆடியோ, டீசர் ஆகியவை வெளியாகிவிட்ட நிலையில், படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து பலரும் தங்கள் யூகத்தின் அடிப்படையிலேயே செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
‘கபாலி’ படத்தை முதல் நாள், முதல் காட்சியே பார்க்க ரசிகர்கள் ஆர்வமாகி வரும் சூழ்நிலையில், ‘கபாலி’ படம் குறித்த புதிய தகவல்களை சேகரிக்க மீடியாக்கள் ‘கபாலி’ குழுவை அணுகினாலும் அவர்களிடமிருந்து தொடர்ந்து மவுனமே பதிலாக வருகிறது. இதற்கெல்லாம் காரணம் ரஞ்சித் படக்குழுவினருக்கு போட்ட வாய் பூட்டுதான் காரணம் என்று தோன்றுகிறது.
ஆனால், ரசிகர்களோ ‘கபாலி’ படத்தின் புதிய செய்திகள் எதுவும் வெளிவராதா? என்ற ஆவலுடன் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். செய்திகளை ரசிகர்களுக்கு கொண்டு செல்லும் மீடியாக்களும், ‘கபாலி’ படத்தில் நடித்தவர்களிடம் அப்படம் குறித்து கேட்டால் யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள்.
இதுகுறித்து அவர்களே கூறும்போது, ‘கபாலி’ படம் குறித்து இப்போதைக்கு எதுவும் வெளியில் சொல்லவேண்டாம் என்று படத்தின் இயக்குனர் ரஞ்சித், தங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறுகின்றனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏனென்றால், ‘கபாலி’ படத்தின் ஆடியோ, டீசர் ஆகியவை வெளியாகிவிட்ட நிலையில், படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து பலரும் தங்கள் யூகத்தின் அடிப்படையிலேயே செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
‘கபாலி’ படத்தை முதல் நாள், முதல் காட்சியே பார்க்க ரசிகர்கள் ஆர்வமாகி வரும் சூழ்நிலையில், ‘கபாலி’ படம் குறித்த புதிய தகவல்களை சேகரிக்க மீடியாக்கள் ‘கபாலி’ குழுவை அணுகினாலும் அவர்களிடமிருந்து தொடர்ந்து மவுனமே பதிலாக வருகிறது. இதற்கெல்லாம் காரணம் ரஞ்சித் படக்குழுவினருக்கு போட்ட வாய் பூட்டுதான் காரணம் என்று தோன்றுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X