என் மலர்
- 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட மனு அளித்தவர்களுக்கு நேர்காணல்.
- சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நாளை மறுநாள் முதல் தவெக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் 10ம் தேதி முதல் தொடங்கும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திமுக ஆட்சியில் மட்டும் இதுவரை 27 காவல்நிலையச் சாவுகள் நடந்துள்ளன.
- திமுக ஆட்சியில் மனித உயிர்களுக்கும், மனித உரிமைகளுக்கும் மரியாதை இல்லை என்பதையே இது காட்டுகிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலைய காவலர்களால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் கைது விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். மனித உயிர்களும், மனித உரிமைகளுக்கும் கிஞ்சிற்றும் மதிப்பளிக்காமல் திமுக அரசும், காவல்துறையும் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
மானாமதுரையில் கடந்த 6-ம் தேதி இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஆகாஷ் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அடுத்த சில மணி நேரங்களில் கால் முறிந்த நிலையில் ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், வழக்கம்போலவே காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பி ஓடும்போது பாலத்திலிருந்து விழுந்து கால் முறிந்து விட்டதாக காவல்துறை கூறியது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும்போது நன்றாக இருந்த ஆகாசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக காவல்துறை சார்பில் கதை எழுதப்படுகிறது.
ஆனால், ஆகாஷ் கைது செய்யப்பட்டது முதல் உயிரிழக்கும் வரை காவல் நிலையத்திற்கே அழைத்துச் செல்லப்படவில்லை என்றும், அவரை ரகசிய இடத்தில் வைத்து கொடுமைப்படுத்தி காவல்துறையினர் படுகொலை செய்து விட்டதாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். காவல்துறையினருக்கு எதிராக ஆகாஷ் உறவினர்கள் நடத்தும் சாலை மறியல் போராட்டத்தால் மதுரை- ராமேஸ்வரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கத் திறனற்ற அரசும், காவல்துறையும் அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் ஏற்படும் போதெல்லாம் அதை திசை திருப்புவதற்காக கைதிகளை சுட்டுக்கொல்வது, காலை முறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. வழக்குகளை முறையாக விசாரித்து தண்டனை பெற்றுத் தருவதற்கு பதிலாக கைதிகளை சித்திரவதை செய்து கொலை செய்யும் போக்கு திமுக ஆட்சியில் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் மடப்புரம் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், இப்போது மானாமதுரையில் ஆகாஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆகாஷ் சித்திரவதைக் கொலைக்கு காரணமான காவல்துறையினர் அனைவரும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். ஆகாஷ் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் கண்டனம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான ஆகாஷ் எனும் இளைஞர் காவல்துறையினரின் சட்டவிரோத துன்புறுத்தலால் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆகாஷை கைது செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலையத்திற்கே அழைத்துச் செல்லாமல் சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்தியதோடு, தொடர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதே ஆகாஷின் உயிரிழப்புக்குக் காரணம் எனக்கூறி அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும்போது நன்றாக இருந்த கைதி, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் காவல்துறையிலிருந்து அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதாக அல்ல என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச்சம்பவங்களைத் தடுக்க திறனற்ற திமுக அரசு, ஒவ்வொரு கொலைச் சம்பவத்திற்கும் புதுப்புது காரணங்களை அடுக்குவதையும், மக்கள் மீது அதிகரிக்கும் அதிருப்தியைத் திசைதிருப்பக் கைதிகள் மீது இதுபோன்ற சித்ரவதைகளை அரங்கேற்றுவதையுமே வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, காவல்துறையினரின் சித்ரவதைக்குள்ளாகி உயிரிழந்திருப்பதாகக் கூறப்படும் கைதி ஆகாஷின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, இவ்வழக்கை விரிவாக விசாரித்து காவல்துறையினர் சட்டவிரோதமாகச் செயல்பட்டிருப்பது உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- முதல் இன்னிங்சில் 198 ரன்கள் அடித்த இந்தியா, 2-வது இன்னிங்சில் 149 ரன்களில் சுருண்டது.
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 323 ரன்கள் குவித்தது.
இந்தியா- ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் கடந்த 6-ம் தேதி பெர்த்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் சுதர்லேண்ட் 4 விக்கெட்டுகளும், லூசி ஹாமில்டன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் தொடங்கியது. சுதர்லேண்ட் அபாரமாக விளையாடி 129 ரன்கள் குவித்தார். எலிசி பெர்ரி 76 ரன்கள் சேர்த்தார். இதனால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 323 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் 125 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய பேட்டர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரத்திகா ராவல் மட்டும் தாக்குப்பிடித்து 63 ரன்கள் அடிக்க இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது.
ஒட்டுமொத்தமாக இந்தியா 24 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்ததால், ஆஸ்திரேலியா அணிக்கு வெறும் 25 ரன்கள் மட்டுமே இழக்காத நிர்ணயிக்கப்பட்டது. இதை ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது. அதன் பிறகு ஒரு நாள் தொடரையும், தற்போது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளது.
- பல் மருத்துவரான இவர், நடனம் மற்றும் ஆடை அலங்கார போட்டிகளில் பங்கேற்பு.
- 'மிஸ் கிராண்ட் இந்தியா' போட்டியில் பங்கேற்க உள்ளார்.
கேரள மாநிலம் மூவாட்டுப்புழாவை சேர்ந்தவர் டாக்டர் கே.எஸ்.அஸ்வினி. பல் மருத்துவரான இவர், நடனம் மற்றும் ஆடை அலங்கார போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
தொடர்ந்து அழகி போட்டியில் பங்கேற்ற அஸ்வினி, தற்போது 'மிஸ் கிராண்ட் கேரளா 2026' பட்டம் வென்றுள்ளார்.
இதன் மூலம் அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள 'மிஸ் கிராண்ட் இந்தியா' போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இவரது தந்தை ஸ்ரீராஜ், தெற்கு ரெயில்வேயில் மின் பொறியாளராகவும், தாயார் பிந்துமேனன், கேரள நீர் ஆணையத்தில் கணக்கு அதிகாரியாகவும் பணியாற்றி வருகின்றனர்.
- ஈரான் தோற்கடிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
- பலியானவர்களின் எண்ணிக்கை 1300-ஐ கடந்துள்ளது.
இஸ்ரேல் - அமெரிக்கா ஈரான் மீது கடந்த ஒரு வார காலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடியாக இஸ்ரேல் மீதும் அமெரிக்க ஆதரவு மத்திய கிழக்கு நாடுகள் மீதும் அங்குள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் வளைகுடா நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டார். ஈரான் மீது அங்கிருந்து தாக்குதல் நடத்தப்படாத வரை நாங்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று தெரிவித்தார்.
ஈரான் அதிபர் மன்னிப்பு கேட்டது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில், தாக்குதலுக்கு உள்ளாகி தோற்கடிக்கப்பட்ட ஈரான், மன்னிப்பு கேட்டு அதன் மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் சரணடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அண்டை நாடுகளுடனான ஈரானின் உறவில் விரிசலை ஏற்படுத்த எதிரிகள் தனது வார்த்தைகளைத் தவறாகச் சித்தரிப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளிலிருந்து ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படாதவரை, அந்த நாடுகளை இலக்காகக் கொண்டு ஈரான் ராணுவ நடவடிக்கை எடுக்காது என்றே தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், "அண்டை நாடுகளை நாங்கள் சகோதரர்களாகவே பார்க்கிறோம். பிராந்திய நாடுகளிடையே பிளவை ஏற்படுத்த அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அனுமதிக்கக் கூடாது" என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவோம் என ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லாரிஜானி எச்சரித்துள்ளார்.
"எங்கள் தலைவரின் இரத்தத்திற்கு நாங்கள் இரக்கமின்றிப் பழிவாங்குவோம். இதற்கு டிரம்ப் விலை கொடுக்க வேண்டியிருக்கும் " என்று லாரிஜானி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது, ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார மையங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஈரானின் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1300-ஐ கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நான் ஈடுபட விரும்புகிறேன்.
- நாங்கள் ஒவ்வொரு 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகு மோதலில் ஈடுபடவிரும்பவில்லை.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஈரானுக்கு இனி ஒரு செயல்பாட்டு ராணுவம் அல்லது அதிகாரத்தில் மீதமுள்ள எந்த தலைமையும் இல்லாதபோதுதான் போர் முடிவடையும்.
ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நான் ஈடுபட விரும்புகிறேன்.
நாங்கள் ஒவ்வொரு 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகு மோதலில் ஈடுபடவிரும்பவில்லை.
அமெரிக்காவை ஒரு போருக்கு இட்டுச் செல்லாத ஒரு ஈரான் அதிபரை தேர்ந்தெடுக்க விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு ஊழியர்களை தி.மு.க. அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கதாகும்.
- தி.மு.க.வுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் புகட்டுவார்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை' என்பதைப் போலத் தான் தி.மு.க. ஆட்சியில் ஆடம்பரமாகவும், பிரமாண்டமாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் அவற்றால் மக்களுக்கு 10 பைசா கூட பயனில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இரு மாதங்களுக்கு மேலாகியும் அத்திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அரசு ஊழியர்களை தி.மு.க. அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கதாகும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சமவேலைக்கு சம ஊதியம் வழங்குவது, அரசு வேலைகளை வழங்குவது, தனியார் நிறுவனங்களில் 75 சதவீதம் பணிகளை தமிழக இளைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்வது போன்றவை நனவாகக் கூடியத் திட்டங்கள் ஆகும். ஆனால், இந்த நனவுத் திட்டங்களையே செயல்படுத்தாமல் கனவுத் திட்டங்களாக மாற்றிய தி.மு.க. அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்து 2030-ம் ஆண்டுக்குள் கனவுத் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகக் கூறுவது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டத்துக்கு போவதாகக் கூறுவதற்கு ஒப்பானதாகும். தமிழ்நாட்டு மக்களை சில நேரம் ஏமாற்ற முடியும். ஆனால், எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது, இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் புகட்டுவார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பள்ளியின் மீது விழுந்திருக்கலாம்.
கடந்த வாரம் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 160 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளியை தாக்கியது அமெரிக்க இராணுவமே என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அவர் கூறுவதாவது, "எங்களிடம் உள்ள ஆதாரங்களின்படி, இது ஈரானே செய்த வேலை. அவர்களின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மிகவும் தரம் குறைந்தவை.
இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் அவற்றுக்குக் கிடையாது. தவறுதலாக அவர்களின் ஏவுகணையே அந்தப் பள்ளியின் மீது விழுந்திருக்கலாம். நாங்கள் ஒருபோதும் பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்" என்று கூறினார்.
- விஜய் குமார் தற்போது அறிவு என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
- சத்யசிவா அறிவு படத்தை இயக்கியுள்ளார்.
'உறியடி', 'உறியடி 2', 'ஃபைட் கிளப்' என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை அடுத்து விஜய் குமார் தற்போது அறிவு என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மகளிர் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது.
பெண் உரிமைகளை மையமாகக் கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
- விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன்வைத்தார்.
- கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் ஒரே காரில் திரிஷாவுடன் விஜய் வந்தார்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குறித்து கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இதனிடையே கரூர் சம்பவத்தை அடுத்து அவர் மீது குற்றச்சாட்டுகள், வழக்குகள் என நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே, விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரது மனைவி சங்கீதா முன்வைத்தார். இதுதொடர்பாக மறுப்பு எதுவும் தெரிவிக்காத விஜய், சங்கீதா கூறியது உண்மை என்பதை மெய்பிக்கும் வகையில் கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் ஒரே காரில் திரிஷாவுடன் விஜய் ஒன்றாக வந்தது அமைந்தது. இதுதொடர்பாக விஜய் மீது கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. முன்னதாக விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள் கூட தற்போது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரே காரில் விஜய் - திரிஷா வந்தது குறித்து நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சட்டென விமல், "அந்தக் காரை இப்போ யாரு வச்சிருக்கா" என்று கூறியதும் அங்கிருந்தவர்கள் சிரிக்க தொடங்கினர்.
இது தொடர்ந்து விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லாமல் மழுப்பலான பதில்களை விமல் கொடுத்தார்.







