#Vijay - திரிஷா குறித்த கேள்வி... அந்தக் காரை இப்போ யாரு வச்சிருக்கா - நடிகர் விமல்

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன்வைத்தார். கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் ஒரே காரில் திரிஷாவுடன் விஜய் வந்தார்.
#Vijay - திரிஷா குறித்த கேள்வி... அந்தக் காரை இப்போ யாரு வச்சிருக்கா - நடிகர் விமல்
Published on

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குறித்து கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இதனிடையே கரூர் சம்பவத்தை அடுத்து அவர் மீது குற்றச்சாட்டுகள், வழக்குகள் என நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே, விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரது மனைவி சங்கீதா முன்வைத்தார். இதுதொடர்பாக மறுப்பு எதுவும் தெரிவிக்காத விஜய், சங்கீதா கூறியது உண்மை என்பதை மெய்பிக்கும் வகையில் கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் ஒரே காரில் திரிஷாவுடன் விஜய் ஒன்றாக வந்தது அமைந்தது. இதுதொடர்பாக விஜய் மீது கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. முன்னதாக விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள் கூட தற்போது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரே காரில் விஜய் - திரிஷா வந்தது குறித்து நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சட்டென விமல், "அந்தக் காரை இப்போ யாரு வச்சிருக்கா" என்று கூறியதும் அங்கிருந்தவர்கள் சிரிக்க தொடங்கினர்.

இது தொடர்ந்து விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லாமல் மழுப்பலான பதில்களை விமல் கொடுத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com