search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    26.9.2022 முதல் 2.10.2022 வரை

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும் யோகமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் நீசம் பெற்றாலும் 4-ம் அதிபதி சூரியன் மற்றும் 2,5-ம் அதிபதி புதனுடன் குருப் பார்வையில் இருப்பதால் முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். அடிப்படைத் தேவைகளுக்கு திணறியவர்களுக்கு கூட சரளமான பண புழக்கம் உண்டாகும்.

    பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல வாபத்தை பெற்றுத்தரும். பத்திரிக்கை நிறுவ னங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். வீடு கட்டப் போட்ட பட்ஜெட் திட்டமிடுதலை விட எகிறும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். இழந்த பதவி தேடி வரும்.

    உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும் 2.10.2022 அதிகாலை 3.10 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போன்ற மன வருத்தம், சங்கடங்கள் நீடிக்கும். வேலையில் மந்தத்தன்மை நிலவும். விநாயகர் கவசம் பாராயணம் செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×