என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிம்மம்
இந்தவார ராசிபலன்
1.4.2024 முதல் 7.4.2024 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் 8-ல் ராகுவுடன் மறைகிறார். ராசிக்கு செவ்வாய், சனி பார்வை. 2,11-ம் அதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் வக்ரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி வக்ரம் என முக்கிய கிரகங்க ளின் சஞ்சாரம் சற்று சுமாராக உள்ளது.குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்க வேண்டும்.தம்பதிகள் ஈகோ பார்க்காமல் இருந்தால் தப்பி விடலாம். சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதிகளின் அறிகுறி தோன்றும், அரசு காரியங்களுக்கு சிபாரிசுக்கு அலைய நேரும்.
எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமாக செயல்பட வேண்டும். ராசிக்கு குருப் பார்வை கவசமாக இருக்கிறது.திருமணத் தடை அகன்று நல்ல வரன்கள் தேடி வரும். மறுமண முயற்சியில் வெற்றி உண்டு. 7.4.2024 அன்று காலை 7.39-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது.தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போட்டு பணத்தை யாருக்கும் கடனாகத்தர வேண்டாம். இனம் புரியாத கவலை கற்பனை பயம் தோன்றலாம்.குலதெய்வ வழிபாடு உங்களை நன் முறையில் வழி நடத்தும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்