என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கும்பம்
இந்தவார ராசிபலன்
22.4.2024 முதல் 28.4.2024 வரை
சகாயமான வாரம். இந்த வாரத்தில் ராசியை விட்டு செவ்வாய் நகர்ந்து தன ஸ்தானம் செல்கிறார். ராகு மற்றும் புதனுடன் இணைகிறார். சுக்ரன் 3ம்மிடம் சென்று குரு சூரியனுடன் இணைகிறார். புதன் வக்ர நிவர்த்தியாகிறார்.நிலையற்ற தன்மை, நெருக்கடிகள், மறைமுக எதிர்ப்புகள் விலகும்.மன சஞ்சலம் அகலும். துன்பங்களும், துயரங்களும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும்.மறைந்து கிடந்த திறமைகள் வெளி உலகத்திற்கு தெரியவரும். வீடு, வாகன தேவைக்கு உங்கள் அலுவலகத்தில் கடன் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலைக்கான உத்தரவு வரும். வாழ்க்கை துணை, நண்பர்கள், தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
சிலருக்கு மாமியார் மூலம் அதிர்ஷ்ட பணம் அல்லது சொத்துக்கள் கிடைக்கும். திருமணத் தடை அகலும். வசதியான வாழ்க்கைத் துணை கிடைப்பார். புத்திர பிராப்தம் உண்டாகும். அதனால் டென்ஷன், கோபம் உருவாகும்.பங்கு வர்த்தகத்தில் ஆச்சரியப்படும் விதத்தில் பெரும் லாபம் கிடைக்கும். 23.4.2024 அன்று காலை 9.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற வீண் செலவுகளும் விரயங்களும் ஏற்படலாம். சித்ரா பவுர்ணமியன்று சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்