தொழில்நுட்பம்

ரோஸ் கோல்டு நிறத்தில் புதிய ஸ்மார்ட்போன்: சியோமி அறிவிப்பு

Published On 2018-01-31 10:35 GMT   |   Update On 2018-01-31 10:35 GMT
சியோமி நிறுவனத்தின் புதிய டீசர், ரோஸ் கோல்டு நிற ஸ்மார்ட்போன் வெளியிட இருப்பதை தெரிவித்திருக்கிறது.
புதுடெல்லி:

சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. ரெட்மி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசரை பதிவிட்டிருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி பிரான்டிங் கொண்டிருப்பது உறுதியாகி உள்ளது. 

ரெட்மி ட்விட்டரில் பதிவிடப்பட்டிருக்கும் டீசர், இந்தியாவில் ரெட்மி 5A ஸ்மார்ட்போன் ரோஸ் கோல்டு நிறத்தில் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதிய ஸ்மார்ட்பன் பிளிப்கார்ட் வலைத்தளத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளது. 



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 5A டார்க் கிரே, ஷேம்பெயின் கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற நிறங்களில் வெளியிடப்பட்டது. எனினும் கோல்டு மற்றும் கிரெ நிற ஸ்மார்ட்போன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. புதிய ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் மற்றும் Mi.com வலைத்தளங்களில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.5000 பட்ஜெட்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கிறது. 

சியோமி ரெட்மி 5A சிறப்பம்சங்கள்:

- 5.0 இன்ச் எச்டி 1280x720 பிக்சல் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் சிப்செட்
- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- 3000 எம்ஏஎச் பேட்டரி
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், ஜிபிஎஸ்
- ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 9
Tags:    

Similar News