புதுச்சேரி

கோப்பு படம்.

மனைவி மீது கல் வீசி தாக்கி கொலைமிரட்டல்

Published On 2023-04-30 07:39 GMT   |   Update On 2023-04-30 07:39 GMT
  • கொலை மிரட்டல் விடுத்த அலி அப்பாஸ் வீட்டு வாசலில் இருந்த பூ , ஜாடி உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தினார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை லப்போர்த் வீதியை சேர்ந்தவர் அலி அப்பாஸ். இவரது மனைவி ரெனி மேரி செசில் (வயது 37).

திருமணமான 5 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்த ரெனி மேரி பிரச்சனைக்கு தீர்வு காண கோர்ட்டில் விவகாரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 27-ந் தேதி கோட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

கோர்ட்டி ற்கு வந்த அலி அப்பாஸ் மனைவியிடம் கோர்ட்டிற்கும், போலீஸ் நிலையத்திற்கும் அலைய வைக்கின்றாயா ? என கேட்டு தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.  ரெனி மேரி வீட்டில் இருந்த போது அங்கு வந்த அலி அப்பாஸ் வீட்டு வாசலில் நின்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.

ரெனி மேரி வெளியில் சென்று பார்த்த போது சாலையில் கிடந்த கல்லை எடுத்து அவர் மீது வீசியுள்ளார். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த அலி அப்பாஸ் வீட்டு வாசலில் இருந்த பூ , ஜாடி உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தினார்.

உடனே ரெனி மேரி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு போலீசார் வந்தனர். அவர்களை பார்த்ததும் அலி அப்பாஸ் அங்கிருந்து ஓடி விட்டார்.

இதுகுறித்து ரெனி மேரி அளித்த புகாரின் அடிப்படையில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News