உலகம்
நேபாளத்தில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- நேபாளத்தின் காத்மண்டுவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது.
காத்மண்டு:
நேபாளத்தின் காத்மண்டுவில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 4.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தரைப்பகுதியில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.