செய்திகள்
விமான போக்குவரத்துக்கு தடை

இந்திய விமானங்களுக்கான தடை ஜூலை 11 வரை நீட்டிப்பு - பெரு நாடு அறிவிப்பு

Published On 2021-06-21 18:01 GMT   |   Update On 2021-06-21 18:01 GMT
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கான தடையை நீட்டித்து வருகின்றன.
லிமா:

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பெரு 19-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இருந்து வரும் விமான போக்குவரத்துக்கான தடையை அடுத்த மாதம் 11-ம் தேதி வரை நீட்டித்து பெரு நாடு உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுடனான பயணிகள் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் ஜூலை 11-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
Tags:    

Similar News