செய்திகள்
கோப்புப்படம்

டிக்-டாக் செயலி மீதான ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுக்கு கோர்ட்டு இடைக்கால தடை

Published On 2020-10-31 21:07 GMT   |   Update On 2020-10-31 21:07 GMT
டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
வாஷிங்டன்:

சீனாவின் டிக் டாக் மற்றும் வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு நவம்பர் 12-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவை எதிர்த்து, டிக் டாக் பயனாளர்கள் 3 பேர் பென்சில்வேனியா மாகாணம் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி வெண்டி பீட்டில்ஸ்டோன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவு மக்களின் பேச்சுரிமைக்கு இடையூறாக இருப்பதாக வாதிட்டனர்.

அதனைத்தொடர்ந்து டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Tags:    

Similar News