செய்திகள்
இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்திக்க வேண்டும் - சீனா பாதுகாப்புத்துறை மந்திரி கோரிக்கை
ரஷியா சென்றுள்ள இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த சீன பாதுகாப்புத்துறை மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.
மாஸ்கோ:
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்றுள்ளார். அவர் நேற்று ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் சர்ஜெ ஷோய்குவை சந்தித்தார்.
பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், இந்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத்சிங்கை சந்திக்க வேண்டும் என சீன பாதுகாப்புத்துறை மந்திரி விய் ஃபென்ஹி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவிடம் சீனா விடுத்துள்ள இந்த கோரிக்கையில் இருநாட்டு பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்த அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு பாதுகாப்பு மந்திரிகள் சந்திப்பு தொடர்பாக சீனா விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக இந்தியா தற்போதுவரை பதிலும் அளிக்கவில்லை.
லடாக் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்திக்க சீன பாதுகாப்புத்துறை மந்திரி அனுமதிகோரியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.