செய்திகள்
திபெத்தியர்கள் போராட்டம்

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் திபெத் மக்கள் போராட்டம்

Published On 2020-07-11 19:40 GMT   |   Update On 2020-07-11 19:40 GMT
சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் வாழும் திபெத் சமுதாய மக்களும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நியூயார்க்:

லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதும், இந்திய வீரர்கள் 20 பேரை கொலை செய்ததும் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நாட்டுக்கு எதிராகவும், அவர்களது தயாரிப்புகளை புறக்கணிக்கக் கோரியும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்தன.
 
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் சீனாவின் ஆக்கிரமிப்பு போக்கை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். நியூயார்க், நியூஜெர்சி மாநிலங்களில் வசிக் கும் இந்தியர்கள், புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கூடி சீனாவுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் சீனாவின் அலட்சியமானபோக்கைக் கண்டித்து அமெரிக்காவில் வாழும் திபெத் சமுதாய மக்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்தியாவுக்கு திபெத் ஆதரவளிக்கிறது, திபெத்தில் இருந்து சீனா வெளியேற வேண்டும் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
Tags:    

Similar News