செய்திகள்
விபத்துக்குள்ளான பேருந்து

சீனாவில் கல்லூரி பேருந்து ஏரியில் மூழ்கி விபத்து - மாணவர்கள் உள்பட 21 பேர் பலி - வீடியோ

Published On 2020-07-07 13:59 GMT   |   Update On 2020-07-07 15:19 GMT
சீனாவில் பேருந்து ஒன்று ஏரியில் மூழ்கிய விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெய்ஜிங்:

சீனாவின் தென்மேற்கே கைசவ் மாகாணத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  அதில், வருடாந்திர கல்லூரி நுழைவு தேர்வில் பங்கேற்பதற்காக கல்லூரி மாணவர்களும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அந்த பேருந்து வீதியை விட்டுவிலகி, அருகில் உள்ள ஹாங்ஷான் நீர்த்தேக்கத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.  காயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையால் பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால், கடந்த வெள்ளி கிழமை வரை சீனா முழுவதும் 119 பேர் பலியாகியோ அல்லது காணாமலோ போயுள்ளனர் என கூறப்படுகிறது.  இந்நிலையில், ஏரியில் பேருந்து மூழ்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
Tags:    

Similar News