செய்திகள்
கண்ணி வெடி விபத்து (கோப்புப்படம்)

ஆப்கானிஸ்தானில் கண்ணி வெடியில் சிக்கி 8 பேர் பலி

Published On 2020-04-02 06:32 GMT   |   Update On 2020-04-02 06:32 GMT
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் அஷ்ரப்கனி தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனாலும் அங்கு வன்முறை குறைந்தபாடில்லை. தலிபான் பயங்கரவாதிகள் போலீசாரையும், ராணுவ வீரர்களையும் குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தெற்கு மாகாணமான ஹெல்மண்டில் உள்ள நஹர் இ சரஜ் மாவட்டத்தில் சாலைக்கு அடியில் பயங்கரவாதிகள் கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருந்தனர்.

அந்த வழியாக வந்த கார் ஒன்று கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் தலிபான் பயங்கரவாதிகளே இந்த நாச வேலையில் ஈடுபட்டிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
Tags:    

Similar News