செய்திகள்
விபத்து ஏற்பட்ட நிலக்கரி சுரங்கம்

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து - 7 பேர் பலி

Published On 2020-03-21 06:16 GMT   |   Update On 2020-03-21 06:16 GMT
பாகிஸ்தானில் உள்ள நிலக்கரி சுரங்கரத்தில் நடந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
லாகூர்:

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரம் டிஹரி என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டுவருகிறது. அந்த சுரங்கத்தில் நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் வேலையை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக நிலக்கரி சுரங்கத்தில் திடீரெனெ வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்திற்குள் சிக்கித்தவித்த 3 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் இந்த வெடி விபத்து காரணமாக சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News