செய்திகள்
விபத்துக்குள்ளான பஸ்கள்

கானா: இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 35 பேர் பலி

Published On 2020-03-09 21:59 GMT   |   Update On 2020-03-09 21:59 GMT
கானா நாட்டில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
அக்ரா:

கானா மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றாகும். அந்நாட்டின் போனொ கிழக்கு மாகாணம் கின்டபோ நகரில் இருந்து டெட்ஸிமென் நகர் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. 

கின்டபோ-டமெல் தேசிய நெடுச்சாலையில் உள்ள அமொமா குவன்டா என்ற கிராமம் அருகே பஸ் சென்றபோது சாலையில் எதிரே வந்துகொண்டிருந்த மற்றொரு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

மோதிய வேகத்தில் இரண்டு பஸ்களிலும் தீ பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் 35 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News